டெல்லி:

னவரி 31ந்தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

2020-2021ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பிப்ரவரி 1ந்தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. முன்னதாக ஜனவரி 31ந்தேதி  நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கப்பட உள்ளது.

இந்த நிலையில், ஜனவரி 31-ம் தேதி பாஜக நாடாளுமன்ற செயற்குழு கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் எம்.பி.க்கள் நடந்துகொள்வது குறித்தும், எதிர்க்கட்சிகளை சமாளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.