மத்தியில் மோடி அரசு பதவியேற்றதிலிருந்து, அந்த அரசின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து எந்தப் போராட்டங்கள் நடைபெற்றாலும், அதில் நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவி விட்டார்கள் என்ற குற்றச்சாட்டை சுமத்துவது, பாரதீய ஜனதா மற்றும் அதன் துணை அமைப்புகளின் வேலை.

தமிழ்நாட்டில் கடந்த 2017ம் ஆண்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தில்கூட, மோடி எதிர்ப்பு கோஷங்கள் எழுந்தவுடன், இதே குற்றச்சாட்டை சுமத்தினார்கள்.

தற்போது, டெல்லியில் நடைபெற்றுவரும் உலகம் காணாத மாபெரும் விவசாயிகள் போராட்டத்தில்கூட, நக்சல்கள் மற்றும் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர் என்று சமீபத்தில் பேசியுள்ளார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.

எனவே, இப்படியான வழக்கமான குற்றச்சாட்டை முன்வைத்து, அப்போராட்டத்தை சீர்குலைக்க, மோடி அரசு ஏதேனும் திட்டமிடுகிறதோ? என்ற அச்சமும் கேள்வியும் சமூகப் பார்வையாளர்களின் மனதில் எழுந்துள்ளன.