கொல்கத்தா:

இடைத்தேர்தல் முடிவு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களிடம் கூறுகையில்,‘‘இடைத்தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் தக்க பாடத்தை கற்றுத் தந்துள்ளது.

இதில் மாநில கட்சிகள் தான் அதிகம் வெற்றி பெற்றுள்ளன. எனவே மாநில கட்சிகள் ஒன்றிணைவது காலத்தின் கட்டாயம். அதற்கான வேலைகளை தொடங்க வேண்டும்.

மாநில கட்சிகள் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது. இது தான் வெற்றிக்கான பார்முலா. இடைத்தேர்தல்களில் பாஜக பெற்ற தோல்வி, அது மரணத்தின் விளிம்பில் இருப்பதையே காட்டுகிறது’’ என்றார்.