காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை குறிவைத்து தாக்கி வரும் மூத்த தலைவர்கள் கட்சியை பலவீனப்படுத்துகிறார்கள்.

கட்சிக்குள் சீர்த்திருத்தங்களை கொண்டு வரவே சோனியா காந்தி விரும்புகிறார்.

மூத்த தலைவர்கள் தங்களது கருத்துகளை கட்சி வளர்ச்சிக்காக கட்சிக்குள் தெரிவிக்கவேண்டுமே ஒழிய பொதுவெளியில் அல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.

மேலும், பா.ஜ.க. ஒரு நிரந்தர கட்சி அல்ல மோடிக்குப் பின் உட்கட்சி பூசலால் சிதறுண்டு போகும். அவர்கள் கடந்து செல்லும் மேகம் போல் அவ்வப்போது வருவார்கள் போவார்கள்.

காங்கிரஸ் கட்சி வற்றாத ஜீவ நதி, நாம் ஆட்சியில் இல்லை என்பதற்காக தலைவர்களோ தொண்டர்களோ பீதி அடைய வேண்டாம். நம்பிக்கை இழக்காமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் வீரப்ப மொய்லி கூறியுள்ளார்.