டில்லி

க்களவையில் தரக்குறைவாகப் பேசியதால் கடும் கண்டனத்துக்குள்ளான பாஜக நாடாளுமன்ற உறுப்பினருக்கு அக்கட்சி புதிய பொறுப்பை அளித்துள்ளது.

டில்லி தெற்கு தொகுதியின் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரான ரமேஷ் பிதுரி நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில் சந்திரயான் 3 குறித்த விவாதத்தின் போது, சக நாடாளுமன்ற உறுப்பினரான பகுஜன் சமாஜ் கட்சியின் டேனிஷ் அலியை நோக்கிக் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  அவரது பேச்சு ‘இஸ்லாமிய வெறுப்பு பேச்சு’ என பல்வேறு அரசியல் கட்சிகள் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தன.

பிதுரியின் பேச்சுக்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வருத்தம் தெரிவித்தார். சபாநாயகர் ஓம் பிர்லாவும் ரமேஷ் பிதுரிக்கு கடுமையான எச்சரிக்கையை  விடுத்தார். ரமேஷ் பிதூரியிடம் விளக்கம் கேட்டு பாஜக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் சக உறுப்பினர் மீது வெறுப்புணர்வை வெளிப்படுத்திய ரமேஷ் பிதுரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம், டோங்க் மாவட்டத்தின் தேர்தல் பொறுப்பாளராக  ரமேஷ் பிதூரியை பாஜக நியமித்துள்ளது. ரமேஷ் பிதுரியின் வெறுப்பு பேச்சுக்கான வெகுமதியாக புதிய பொறுப்பை கு பாஜக கொடுத்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் சாடியுள்ளன.

மாநிலங்களவை உறுப்பினர் கபில் சிபல் தனது எக்ஸ் பதிவில்

“பாஜக வெறுப்பு பேச்சுக்கு வெகுமதி கொடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் டோங்க் மாவட்ட தேர்தல் பொறுப்பாளராக்கி ரமேஷ் பிதுருஈகு பரிசு அளித்துள்ளது. ஆனால் டோங்கில் முஸ்லிம் மக்கள் தொகை 29.25% என்பதால் இது அரசியல் பலன்களுக்கான வெறுப்பினை அடையாளப்படுத்தும் வகையில் உள்ளது”

என்று தெரிவித்துள்ளார்.