தும்கூர்:
சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி தும்கூரில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எனக்குத் தெரிந்த வரை ஆர்எஸ்எஸ் அமைப்பு அந்த காலத்தில் ஆங்கிலேயர்களுக்கு உதவியே வந்தது. சாவர்க்கர் ஆங்கிலேயர்களிடமிருந்து உதவித்தொகை பெற்றவர். சுதந்திரப் போராட்டத்தில் பாஜகவுக்கு எந்தவொரு பங்கும் இல்லை. ஏனென்றால் அந்தக் காலகட்டத்தில் பாஜக என்ற கட்சியே கிடையாது. இதுபோன்ற உண்மைகளை பாஜகவால் ஒருபோதும் மறைக்க முடியாது. காங்கிரஸ் கட்சியும் அதன் தலைவர்களும் சுதந்திரத்திற்காகப் போராடினர்” என்று நேரடியாக விமர்சித்தார்.