டெல்லி: பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா தமக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது: தமக்கு கொரோனா வைரஸ் தொற்றின் ஆரம்ப அறிகுறிகள் தெரிந்தது. பின்னர் பரிசோதனை செய்ததில் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தமது உடல் நிலை நன்றாக இருக்கிறது. மருத்துவர்கள் கூறியதன் பேரில் வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு, அவர்களின் அறிவுரைகளை பின்பற்றி வருகிறேன்.

சில தினங்களாக தம்முடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.