அகர்தலா:

திரிபுராவில் நடைபெற்ற தேர்தல் பாஜக வெற்றி பெற்றதை தொடர்ந்து,  திரிபுரா மாநில முதலமைச்சராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மேலும்  துணை முதல்வராக ஜிஸ்னு தேப் பர்மன் தேர்வு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

திரிபுரா மாநில  சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 17ந்தேதி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை கடந்த 3ந்தேதி நடைபெற்றது.

இதில் 25 ஆண்டுகாலம் ஆட்சி செய்த கம்யூனிஸ்டு ஆட்சி தோல்வி அடைந்தது. பாஜக – திரிபுரா பழங்குடியின மக்கள் கட்சி (ஐபிஎஃப்டி) கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது.

திரிபுராவில் பாஜகவுக்கு ஒரு கவுன்சிலர் கூட இல்லாத நிலையில், அக்கட்சியின் தற்போதைய வெற்றி பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த தேர்தலில் 2 சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளைப் பெற்ற அக்கட்சி, தற்போது சுமார் 43 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கிறது.

இந்நிலையில மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற கட்சி தலைவராக பிப்லாப் குமார் தேப் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதைத்தொடர்ந்து  துணை முதல்வராக ஜிஸ்னு தேப் பர்மன் தேர்வு செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது.

முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ள பிப்லாப் குமார் தேப், மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல இருப்பதாகவும்,  மாநிலத்தில் உள்ள  கல்வி, சுகாதாரம், கிராமிய மற்றும் பழங்குடி வளர்ச்சி போன்றவற்றில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் கூறி உள்ளார்.