பெங்களூரு

டைபெற உள்ள மக்களவை தேர்தலில் பாஜகவுடன் மதச்சார்பற்ற ஜனதா தள்ம் கட்சி கூட்டணி அமைக்க உள்ளது.

மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் கைகோர்க்கப் பாரதிய ஜனதா கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் கொள்கை அளவில் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், மஜத கட்சிக்கு 4 தொகுதிகளை ஒதுக்க உள்துறை மந்திரி அமித் ஷா ஒப்புக்கொண்டதாகவும் பாஜக தலைவர் பிஎஸ் எடியூரப்பா இன்று அறிவித்துள்ளார்.

சமீபத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவகவுடா சமீபத்தில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா மற்றும் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல்கள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகியிருக்கிறது.

மஜத ஒப்புக்கொண்ட தொகுதி பங்கீட்டின்படி, 28 மக்களவை தொகுதிகளைக் கொண்ட கர்நாடகாவில் 4 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் போட்டியிடுகிறது.

மக்களவை தேர்தல் குறித்து கடந்த ஜூலை மாதம் பேசிய தேவகவுடா, கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை என்றும், ஐந்தாறு தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் தனித்தே போட்டியிடுவோம் என்றும் கூறியிருந்தார். பிறகு அடுத்தடுத்து ந்ட்ந்த அரசியல் நகர்வுகளால் தனது முடிவை மாற்றிய தேவகவுடா, பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார்.

இதற்கு முந்தைய தேர்தலில் கர்நாடக மாநிலத்தில் பாஜக 25 மக்களவை தொகுதிகளில்  வெற்றி பெற்றது. மேலும் பாஜக ஆதரவு பெற்ற ஒரு வேட்பாளரும் வெற்றி பெற்றார். தவிர காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலா ஒரு தொகுதியில் வென்றது.