டெல்லி: விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில் 3 மசோதாக்கள் அவசரச் சட்டத்துக்கு மாற்றாக மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

5 மாதங்கள் கழித்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இந் நிலையில் 2020ம் ஆண்டு ஜூன் 5ம் பிரகடனம் செய்யப்பட்ட அவசர சட்டத்தை மாற்ற மக்களவையில் இன்று 3 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

வேளாண் துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி, விவசாயிகளின் வருவாயை பெருக்கும் நோக்கில் இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள் உற்பத்தி பொருள் விற்பனை மற்றும் வணிக (மேம்பாடு மற்றம் வசதி) மசோதா 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகளின் விவசாயிகள் (மேம்பாடு மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம் மசோதா 2020அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா 2020 ஆகிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

முதல் 2 மசோதாக்களை, வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் மக்களவையில் தாக்கல் செய்தார். அத்தியாவசிய பொருட்கள் திருத்த மசோதாவை உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை அமைச்சர் ராவ்சாகிப் பாட்டீல் தான்வே தாக்கல் செய்தார்.