பிஹார்:
பாஜகவின் மூத்த தலைவரும் பிஹாரின் வேளாண்துறை அமைச்சருமான பிரேம்குமார், வாக்களிக்கும் போது தாமரை மலர் அச்சிடப்பட்ட முக கவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு சென்றதைத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கயா நகரத்தை சேர்ந்த பாஜக வேட்பாளராக உள்ள பிரேம்குமார், ஆறு ஆண்டுகளாக அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இன்று அவர் தாமரை மலர் பதித்த மஞ்சள்நிற முககவசத்தை அணிந்து வாக்குச்சாவடிக்கு வந்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வாக்குப்பதிவு நடைபெறுவதற்க்கு 36 மணி நேரத்திற்கு முன்பாகவே பிரச்சாரம் முடிக்கப்பட வேண்டும், ஆனால் பிரேம்குமார் அதனை மீறி விட்டார் என்று சர்ச்சை எழுந்துள்ளது.

மேலும் இந்த விஷயத்தை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்க்கு கொண்டு செல்வதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி தெரிவித்துள்ளது.