“ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாச்சாரத்தை பின்னுக்குத் தள்ளி மொழியை அழிப்பதே சிறந்த வழி” என்று துணை குடியரசு தலைவர் ஜகதீப் தன்கர் பேசியுள்ளார்.

மேலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த ஆக்கிரமிப்பாளர்கள் இதையே செய்தனர் என்றும் கூறினார்.

98வது அகில பாரதிய மராத்தி சாகித்ய சம்மேளனத்தின் பிரதிநிதிகளுடன் உரையாடிய அவர் இவ்வாறு பேசினார்.

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி திணிப்பை ஏற்படுத்த மத்திய மற்றும் மாநில பாஜக அமைப்பினர் முயற்சி செய்து வரும் வேளையில் ஜகதீப் தன்கரின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கனிமொழி எம்.பி., பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.