மிழ்நாட்டில் மகிழ்ச்சியாக இருப்பதால் வேறு நாட்டில் குடியேறமாட்டேன் என்று கனடா மேயருக்கு பிரபல இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பதில் தெரிவித்து உள்ளார்.

கனடா நாட்டின் டொராண்டோ நகர மேயர் அழைப்பின் பேரில் இசைநிகழ்ச்சி நடத்த கடந்த சனிக்கிழமை ரஹ்மான் கனடா சென்றார். டொரண்டோவில் அவர் தலைமையில் 100 இசைக்கலைஞர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முன்பாக அவர் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று தமிழில் பேசத் தொடங்கினார். அப்போது அங்கிருந்த தமிழர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய டொரண்டோ மேயர், கனடாவில் குடியேறும்படி ரஹ்மானுக்கு அன்பு அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து தனது முகநூல் பதிவில் பதிலளித்துள்ள ரஹ்மான், தான் தமிழகத்தில் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், வேறு நாட்டில் குடியேற விருப்பமில்லை என்று கூறியுள்ளார்.

இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானை கெளரவிக்கும் விதமாக கனடா அரசு ஒரு தெருவுக்கு அல்லா ராகா ரஹ்மான் என்று பெயரிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.