துரை

கொரோனா நிதிக்கு யாசகர் பூல் பாண்டியன் 41 ஆம் முறையாக ரூ.10000 தொகையை மதுரைஆட்சியரிடம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி அருகில் உள்ள ஆலங்கிணறு பகுதியைச் சேர்ந்த பூல் பாண்டியன் ஒரு யாசகர் ஆவார். அவர் தாம் யாசகமாகப் பெறும் பணத்தைச் சேமித்து தனக்கென்று செலவழிக்காமல் அப்பணத்தை பொது நிவாரணங்களுக்கு உதவியாக வழங்கி வருகிறார். தனது சேமிப்பில் இருந்து கொரோனா தொற்று காலத்தில், தனது சேமிப்பிலிருந்து ரூ.10,000-ஐ பலமுறை மதுரை மாவட்ட ஆட்சியருக்கு நிவாரணமாக வழங்கி வந்தார்.

இவரது சேவை காரணமாகப் பொதுமக்களால் யாசகர் பூல் பாண்டியன் பாராட்டப்பட்டு வந்தார்.  இந்நிலையில், 41-வது முறையாக மதுரை மாவட்ட ஆட்சியரிடம் 10,000 ரூபாயை .கொரோனா நிவாரண நிதியாக யாசகர் பூல் பாண்டியன் வழங்கி உள்ளார். இதுவரை ரூ.4 லட்சத்து 10,000 தொகையை நிவாரண நிதியாக வழங்கியிருக்கிறார்.

பூல் பாண்டியன் செய்தியாளர்களிடம்,

‘‘யாசகம் மட்டுமே கேட்க எனக்கு தெரியும், யாருக்கும் யாசகம் கொடுக்கத் தெரியாது என்பதாலும் ஏழைகளுக்கு உதவி சென்றடையும் என்பதாலும் நான் அரசிடம் .கொரோனா நிதி வழங்கி வருகிறேன்.  மற்றவர்கள் என்னைப் போல யாசகம் பெறும் பழக்கத்தைத் தவிர்க்க வேண்டும்.  அனைவரும் உழைத்து மட்டுமே உண்ண வேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.  பணத்தின் மீது ஆசை இல்லாத காரணத்தால் நான் யாசகம் பெறும் பணத்தை உதவிக்காக வழங்குகிறேன்’’

என்று தெரிவித்துள்ளார்.