இந்தூர்:

இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், மொபைல் எண், இ மெயில் ஆகியவற்றை பெயர் தெரியாத இணையதளங்களுக்கு ரூ.500க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதை மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த ஜெய்கிஷன் குப்தா என்ற பெண் கடந்த ஆகஸ்ட் 28ம் தேதி தனது கிரெடிட் கார்டை மர்ம நபர்கள் சிலர் தவறாக பயன்படுத்தி ரூ.72 ஆயிரத்து 401ஐ திருடியதாக சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

போலீசாரின் விசாரணையில் ஜெய்கிஷன் கிரெடிட் கார்டு தகவல்களை பயன்படுத்தி மும்பையை சேர்ந்த ராஜ்குமார் பிள்ளை மற்றும் ராம்பிரசாத் நாடார் ஆகியோர் விமானத்தில் டிக்கெட் முன்பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், ‘‘ராஜ்குமார் ஐடி நிறுவன முன்னாள் ஊழியர். ராம்பிரசாத் தனியார் வங்கி முன்னாள் ஊழியர். இவர்கள் கிரெடிட் கார்டு விவரங்களை, சர்வதேச இணையதளங்களில் பயன்படுத்தியதும், அவர்களின் தலைவனாக பாகிஸ்தானை சேர்ந்த ஒருவன் செயல்ப டுவதும் தெரியவந்தது.

இந்த கும்பல் இந்தியர்களின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள், கார்டு வழங்கிய வங்கி, கார்டு உரிமையாளர்களின் வங்கிக் கணக்கு, மொபைல் எண் ஆகியவற்றை பெயர் தெரியாத இணையதளங்களு க்கு ரூ.500க்கு விற்பனை செய்துள்ளனர்’’ என்பது தெரியவந்துள்ளது.

[youtube-feed feed=1]