டாக்கா

ங்காள தேசத்தில் மீண்டும் தேர்தல் நடத்த அந்நா ட்டின் பிரதான எதிர்க்கட்சி வலியுறுத்தி உள்ளது. 

சமீபத்தில் வங்காள தேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஆளுங்கட்சியான அவாமி கட்சி அமோக வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாகக் குற்றஞ்சாட்டி முக்கிய எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணித்தன. தேர்தலில் ஜதியா கட்சி, வங்காள தேசம் கல்யாண் கட்சி போன்ற கட்சிகள் போட்டியிட்டன.

பொதுத் தேர்தல் நடைபெற்ற 299 தொகுதிகளில் 223 தொகுதிகளைக் கைப்பற்றி ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்காள தேசத்தின் பிரதமராக ஷேக் ஹசீனா 4வது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். விரைவில் ஷேக் ஹசீனாவின் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

தேர்தலைப் புறக்கணித்த பிரதான எதிர்க்கட்சியான வங்காள தேச தேசியவாத கட்சி, இந்த தேர்தலை டம்மி தேர்தல் என்றும், அதனை ரத்து செய்யவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளது. மேலும் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்றும், மீண்டும் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதற்காக, அக்கட்சி நாளையும் நாளை மறுதினமும் மக்களைச் சந்திக்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.