சென்னை: ஐதராபாத் அணிக்கெதிரான தனது முதல் லீக் போட்டியில், 150 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது பெங்களூரு அணி.

அந்த அணியின் கிளென் மேக்ஸ்வெல் அதிகபட்சமாக 59 ரன்களை அடித்தார். மொத்தம் 41 பந்துகளை சந்தித்த அவர், 3 சிக்ஸர்கள& 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை அடித்தார்.

கோலியின் பங்களிப்பு 29 பந்துகளில் 33 ரன்கள் மட்டுமே. வேறுயாரும் 20 ரன்களைக்கூட எட்டவில்லை. கூடுதலாக 10 ரன்கள் கிடைத்தன.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தேவ்தத் படிக்கல், டி வில்லியர்ஸ், வாஷிங்டன் சுந்தர் ஏமாற்றினர். இறுதியில், 20 ஓவர்களுக்கு, 8 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்களை மட்டுமே சேர்த்து பெங்களூரு அணி.

ஐதராபாத் சார்பாக ஜேசன் ஹோல்டர் 3 விக்கெட்டுகளையும், ரஷித்கான் 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.