சண்டிகர்: பஞ்சாப்பை சேர்ந்த 119 வயதுடைய உலகின் மூத்த பெண்மணி ஆகிய பச்சன் கவுர் இன்று காலமானார்.

பஞ்சாபிலுள்ள மொஹாலி மாவட்டத்தில் வசித்து வந்தவர் பச்சன் கவுர். மொஹாலி மாவட்டத்தின் மோட் மஜ்ரா எனும் கிராமத்தில் வாழ்ந்து வரக் கூடிய மிகப் பழமையான இந்திய ஆயுதப் படையை சேர்ந்த குடும்பத்தில் ஒருவர் தான் பச்சன் கவுர்.

கணவர் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றியவர். அவரது கணவர் 2 உலக போர்களில் சண்டையிட்டவர். 9 குழந்தைகளுடன் சந்தோஷமான தம்பதியராக வாழ்ந்து வந்த கவுரின் கணவர் 106 வயதில் உயிரிழந்தார்.

பச்சன் கவுர் 119 வது வயதில் இயற்கை எழுதியுள்ளார். அவரின் உயிரிழப்பு வருத்தத்தை தரக்கூடியது என்றாலும், அவரது குடும்பத்தினர் இதுவரை அவர் வாழ்ந்ததை எண்ணி பூரிப்படைந்து உள்ளனர்.