சென்னை: ஆயுத பூஜை விடுமுறையையொட்டி  சொந்த ஊர் சென்றவர்கள் திரும்பும் வகையில் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்து உள்ளது.

ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜையையொட்டி 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால், ஏராளமானோர் நகர்ப்புறங்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தலங்களுக்கும் சென்றனர். இதற்கான  அரசு போக்கு வரத்துத்துறை சிறப்பு பேருந்துகளை இயக்கியது. அதன்படி முதல் 3 நாளில் மட்டும் சென்னையிலிருந்து 4.80 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம் மேற்கொண்டதாக கூறப்பட்டது.

இந்த நிலையில், சொந்த ஊருக்குச் சென்றவர்கள், இன்றுமுதல் சென்னை உள்பட நகரங்களுக்கு திரும்புவார்கள், அதற்காக பல ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையுல், இன்று மட்டும் பல்வேறு நகரங்களில் இருந்து  சென்னை திரும்ப 8000 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்து உள்ளது.