டெல்லி:

யோத்தி தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு செய்ய மனு செய்வோம் என்று சன்னி வக்ஃபு வாரிய வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்து உள்ளார்.

அயோத்தி வழக்கில் உச்சநீதி மன்ற அரசியல் சாசன அமர்வு இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி, சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி இந்துக்களுக்கே சொந்தமான என்று தெரிவித்தது.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  சன்னி வக்ஃபு வாரிய வழக்கறிஞர்  ஜாபர்யாப் ஜிலானி, உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம் என்று கூறியவர், தீர்ப்பில் எங்களுக்கு திருப்தி இல்லை என்று கூறனார்.

தீர்ப்பை எதிர்த்து, தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியவர், அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம்: எங்கள் குழு ஒப்புக் கொண்டால் மறுஆய்வு மனுவை தாக்கல் செய்வோம். இது எங்கள் உரிமை, அது உச்சநீதிமன்ற விதிகளிலும் உள்ளது, தீர்ப்பின் நகல் கிடைத்த பிறகு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும்,.

இவ்வாறு அவர் கூறினார்.