யோத்தி

ரே மாதத்தில் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரூ. 25 கோடி நன்கொடை கிடைத்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று மறுநாள் முதல் பொது மக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டது. அன்றைய தினம் முதல் நேற்று வரை ஒரு மாதத்தில் சுமார் ரூ.25 கோடி நன்கொடையாகவும், 25 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள் கிடைத்துள்ளதாக அறக்கட்டளை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ராமர் கோயில் அறக்கட்டளையின் பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா,

“இதுவரை ரூ. 25 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது  இந்த ரூ.25 கோடியில் காசோலைகள், வரைவோலைகள் மற்றும் கோயில் அறக்கட்டளை அலுவலகத்தில் டெபாசிட் செய்யப்பட்ட பணம் மற்றும் நன்கொடை பெட்டிகளில் டெபாசிட் செய்யப்பட்டவை அடங்கும். அறக்கட்டளையின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செய்யப்படும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் குறித்து எங்களுக்குத் தெரியாது. 

கடந்த ஜனவரி 23 முதல் மொத்தம் 60 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.  ராம பக்தர்கள் ஸ்ரீ ராம ஜென்ம பூமி கோவிலில் பயன்படுத்த முடியாத வெள்ளி மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட பொருட்களை ராமருக்கு நன்கொடையாக வழங்குகிறார்கள்.

இந்த பக்தர்களின் பக்தியை கருத்தில் கொண்டு, ராம் மந்திர் அறக்கட்டளை தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட நகைகள், பாத்திரங்கள் மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்கிறது. ராமர் கோவில் வளாகத்தில் கூடுதல் நன்கொடை பெட்டிகள் அறக்கட்டளையால் வைக்கப்பட்டுள்ளன.” 

என்று கூறினார்.

One month, Ayodhya, Ram temple, Rs. 25 crore, donation,