சென்னை:
AY.4.2 வைரஸ் தமிழகத்தில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியம் உறுதியாக தெரிவித்துள்ளார்.

தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை வேளச்சேரி நேரு நகர் பகுதியில், 100 கிலோ வாட் திறன்கொண்ட மின்மாற்றியைத் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் உருமாறிய AY.4.2 கொரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் இதுவரை டெங்கு நோய் பாதிப்பால் 4 நபர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும், டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்மருத்துவமனைகளில் பிரத்தியேகமான வார்டு அமைக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.
[youtube-feed feed=1]