சென்னை:
ஜல்லிக்கட்டு தடையை நீக்ககோரி தமிழகம் முழுதும் அனைத்துத் தரப்பினரும் இன்று முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதில் கார், லாரி, ஆட்டோ உட்பட வாகன ஓட்டுனர்களும் ஈடுபட்டுள்ளனர். சென்னை வேளச்சேரியை அடுத்துள்ள காமாட்சி மருத்துவமனை ஆட்டோ நிறுத்த ஓட்டுனர்கள், இன்று தங்கள் வாகனங்களை ஓட்டவில்லை.

வேளச்சேரி கைவேலி சந்திப்பில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக முழக்கமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.