சிட்னி:
ஸ்திரேலியாவிற்கு வருகை தந்த இந்திய அணிக்கு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் நன்றி தெரிவித்துள்ளது.

பிசிசிஐ நிர்வாகத்திற்கும் நன்றி தெரிவித்து ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவிற்கு வந்துள்ளது. பல திருப்பங்கள், சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த பார்டர் கவாஸ்கர் கோப்பையை 2-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எழுதியுள்ள கடித்ததில், முக்கியமான காலகட்டத்தில் உலகம் முழுக்க இருக்கும் பல மில்லியன் கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளிக்கும் வகையில் மிக சிறப்பான கிரிக்கெட் தொடர் ஒன்றை நடத்த உறுதுணையாக இருந்த இந்திய அணிக்கும், பிசிசிஐ அமைப்பிற்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளது.

கொரோனா பெருந்தொற்றுக்கு இடையே இப்படி ஒரு சர்வதேச கிரிக்கெட் தொடரை நடத்த உறுதுணையாக இருந்த இந்திய அணிக்கும், வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கு, பணியாளர்களுக்கும் எங்களது நன்றிகள் என்று குறிப்பிட்டுள்ளது.