காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் ஜூலை 1 ம் தேதி துவங்கி, முதல் 24 நாட்கள் சயன கோலத்திலும், ஆகஸ்ட் 1 முதல் நின்ற கோலத்திலும் அருள்பாலித்து வந்தார். 48 நாட்கள் நடந்த அத்திவரதர் வைபவம் நிறைவடைந்தது.

அத்திவரதரை தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் சென்று வழிபட்டார். அவரை தொடர்ந்து, நடிகை நயன்தாரா தனது காதலர் விக்னேஷ் சிவன் மற்றும் குடும்பத்தினருடன் சென்று அத்திவரதரை வழிப்பட்டார்.

இந்நிலையில், இன்று காலை இயக்குனர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சென்று அத்திவரதரை வழிபட்டுள்ளார்.