ஜகார்த்தா: இந்தோனேசியாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக பலியானோர் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது.

இந்தோனேசியாவின் கிழக்கு புளோரஸ் ரீஜென்சியில் நேற்று திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் சிக்கினர். புளோரஸ் திமூர் மாவட்டத்தில் 44 பேரும், லெம்பட்டா மாவட்டத்தில் 11 பேரும் உயிரிழந்துள்ளனர்.

நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்துள்ளதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மாயமானவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த வாரம் இந்தோனேசியாவின் சில பகுதிகள் கடும் மழை, பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.