புதுடெல்லி: 
பில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், பஞ்சாப் நெருக்கடி குறித்து, டெல்லியில், காங்கிரஸ் மூத்தத் தலைவர் கபில் சிபல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதிய 23 பேர்களின் சார்பாக நான் பேசுகிறேன். கட்சித் தலைவர், காங்கிரஸ் செயற்குழு, மத்திய தேர்தல் குழுவுக்குத் தேர்தல் நடத்துவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். எங்களின் கருத்துக்களைத் தலைமை கேட்க வேண்டும். திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் எனத் தலைவருக்கு எனது சக மூத்த நிர்வாகி ஒருவர் கடிதம் எழுதலாம் அல்லது எழுதியிருக்கலாம் என நான் எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்நிலையில்,  கபில் சிபலின் பேச்சுக்குக் காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் உள்ள அவரது வீட்டின் முன்பு “கெட் வெல் சூன்” என்ற பாதுகையுடன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.