டில்லி

டில்லி விமானநிலையத்தில் ஒரே நேரத்தில் இரு விமானங்களுக்கு  புறப்பட மற்றும் தரை இறங்க சிக்னல் அளிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை டில்லியில் இருந்து மேற்கு வங்காளத்தின் பாக்டோக்ரா நகருக்கு செல்லும் யு.கே.725 விமானம் டில்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. ஆனால் அதே நேரத்தில் அகமதாபாத் நகரில் இருந்து டில்லிக்கு வந்த ‘விஸ்தாரா’ விமானம், டில்லி விமான நிலையத்தில் தரையிறங்கியது.

ஒரே நேரத்தில் இந்த இரு விமானங்களுக்கும் புறப்படுவதற்கும், தரையிறங்குவதற்கும் சிக்னல் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரி ஒருவர், பாக்டோக்ரா நகருக்குப் புறப்பட இருந்த விமானத்தை உடனடியாக நிறுத்தும்படி உத்தரவு கொடுத்துளளார்.

டில்லி-பாக்டோக்ரா விமானம் பிரதான ஓடுபாதையில் இருந்து திருப்பப்பட்டு, வேறொரு ஓடுபாதைக்கு மாற்றப்பட்டதால்  மற்றொரு விமானம் பத்திரமாகத் தரையிறங்கியது. கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் சரியான நேரத்தில் உரிய உத்தரவைப் பிறப்பித்ததால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.