டெல்லி: அஸ்ஸாம், மே.வங்கம் மாநிலங்களில் 2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு  காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிற்பகல் 3.30 மணி நிலவரப்படி அஸ்ஸாமில் 63.03% வாக்குகளும், மேற்குவங்க மாநிலத்தில்,  71.07% வாக்குகளும் பதிவாகி உள்ளன. இது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே முதற்கட்ட தேர்தல் மார்ச் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 1)  2வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. . மாநில முதல்வர் மம்தா போட்டியிடும் நந்திகிராம் தொகுதி முழுவதும் 144 தடை உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.  அசாம் மாநிலத்தை பொறுத்தவரை 39 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் 39 தொகுதிகளில் 26 பெண்கள் உள்பட 245 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரு மாநிலங்களிலும் இன்று காலை முதலே வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர். வாக்குப்பதிவு நிலவரம் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.