டாக்கா, 

சிய கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

ஹீரோ ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி வங்கதேசம் தலைநகர் டாக்காவில் நடைபெற்று வருகிறது.  இதில் மொத்தமாக எட்டு அணிகள் பங்கேற்கிறது.

இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் ஜப்பான் அணியை வீழ்த்தியது. அதையடுத்து  இரண்டாவது லீக் போட்டியிலும்  வங்கதேச அணியை 7-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

அதைத்தொடர்ந்து இன்று 3வது லீக் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் தொடக்கம் முதலே அதிரடி காட்டிய இந்திய அணி 3 -க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்திய அணி சார்பில், சிங்கிளி செனா சிங், ஹர்மன்ப்ரீத் சிங், ராமன் தீப்சிங் ஆகியோர் தலா ஒரு கோல்களை அடித்து வெற்றியை உறுதி செய்தனர்.

தொடர்ந்து மூன்று வெற்றிகளை பெற்றதன் காரணமாக புள்ளி பட்டியலில் முதல் இடத்தையும் பிடித்துள்ளது.