சென்னை: இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், டிஎன்பிஎல் சீஸன் – 4 முழுவதும், திண்டுக்கல் அணிக்காக விளையாடவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் அணியில் தான் ஆடவுள்ள தகவலை இன்ஸ்டாகிராம் மூலமாக தெரிவித்துள்ளார் 32 வயது அஸ்வின்.

திண்டுக்கல் நகரிலுள்ள என்பிஆர் கல்லூரி மைதானத்தில், சோப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியை எதிர்த்து ஆடவுள்ளது. கவுன்டி கிரிக்கெட்டில் அவர் நாட்டிங்ஹாம் அணிக்காக ஆடினார். அங்கே மிகவும் சிறப்பாக செயல்பட்டார்.

3 ஆட்டங்களில் 23 விக்கெட்டுகள் மற்றும் 197 ரன்கள் என்று இருந்தது அவரின் செயல்பாடு. “தற்போது எனக்குப் பிடித்த மஞ்சள் சீருடைக்கு மீண்டும் மாறியுள்ளேன். (திண்டுக்கல் அணியின் சீருடை மஞ்சள்). பிரிட்டனில் கழிந்த 4 வாரங்கள் நன்றாக இருந்தது. தற்போது, தமிழ்நாட்டில் இருக்கவேண்டிய நேரம் வந்துள்ளது. தமிழ்நாட்டின் மாவட்டங்களை சற்றி வருவதும் ஒரு மகிழ்ச்சியான விஷயமே” என்றுள்ளார் அஸ்வின்.