சென்னை: அசானி புயல் காரணமாக  தமிழ்நாட்டை வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் கடந்த இரு நாட்களாககுறைந்தது. இந்த நிலையில், புயல் காரணமாக  9 துறைமுகங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அசானி புயல் தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள தால் பல பகுதிகளில்  கனமழைக்கு வாய்ப்பு  உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்த உள்ளது.

வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதைத் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வாட்டி வதைத்து வந்த அக்னி வெயில் வெகுவாக குறைந்து உள்ளது. சென்னை உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் வெயில் குறைந்து மிதமான குளிர்காற்று வீசி வருகிறது. இது பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வங்கக்கடலில் நேற்று முன்தினம் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று மதியம் ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதால், தென்கிழக்கு வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. வங்க கடலில் உருவாகி உள்ள இந்த புயலுக்கு ‘அசானி’ புயல் என இலங்கை பெயர்சூட்டிய  உள்ளது.  இந்த புயல் வரும் 12 மணி நேரத்தில் அசானி புயல் தீவிர புயலாக வலுபெற்று ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி நகரும் எனவும், இதனிடையே, தமிழகத்தில் இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், தீவிர புயலாக வலுப்பெற்ற அசானி புயல் வடமேற்கு திசையில்  நகர்ந்து வரும் நிலையில்,நாளை ஆந்திரா, ஒடிசா கடற்கரையை நோக்கி மத்திய கடல் பகுதியில் நிலவும் எனவும் வானிலை மையம் தெரிவித்திருந்தது.அதே சமயம்,வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும் விதமாக புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 2 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தமிழகத்தில் இன்று டெல்டா மாவட்டங்கள் உட்பட 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி,  புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோவை, கடலூர், தேனி, திண்டுக்கல், காரைக்கால், புதுவை, திருப்பூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை,ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவாய்ப்புள்ளதாகவும், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனிடையே,தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்த நிலையில், வங்கக் கடலில் ‘அசானி’ புயல் உருவானதை குறிக்கும்  புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களிலும் 2ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.