டெல்லி: டெல்லி வன்முறையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறையினர் தடுக்க முயன்றதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. அந்த வன்முறையில் ஈடுபட்டு பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்ததாக விவசாயிகளை போலீசார் கைது செய்து பல்வேறு சிறைகளில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட 115 பேரின் பெயர் உள்ளிட்ட விவரங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ளார். டிராக்டர் பேரணியில் ஈடுபட்ட விவசாயிகள், காணாமல் போனதாக குடும்பத்தினர் தேடுவார்கள் எனக்கூடும் என்பதால் இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.