இடாநகர்: அருணாச்சல பிரதேச முதலமைச்சர் பெமா காண்டுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தமது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:

கொரோனா பரிசோதனை செய்து கொண்டதில் எனக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு கொரோனாவுக்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.

தற்போது ஆரோக்கியமாக உள்ளேன். எவ்வாறாயினும், பிறரின் பாதுகாப்புக்காக, நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன், என்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தங்களை பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.