பியூனஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலக நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் தொடங்கி அரசு உயர் பொறுப்பில் இருப்பவர்கள் வரை கொரோனா தொற்றால் பாதிப்புக்குள்ளாகி வருவது தொடர்கிறது.

இந் நிலையில் அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக தனது டுவிட்டர் பதவில் அவர் பதிவிட்டுள்ளதாவது:  காய்ச்சல் மற்றும் லேசான தலைவலி ஏற்பட்ட பின்னர் கொரோனா பரிசோதனையை மேற்கொண்டேன். அதில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.

அர்ஜெண்டினாவில் இதுவரை 23 லட்சத்து 73 ஆயிரத்து 153 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.