டெல்லி: தடை செய்யப்பட்ட சீன செயலி நிறுவனங்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா என்று மத்திய அரசு கேள்வி எழுப்பி உள்ளது.

இந்தியா, சீனா எல்லை பிரச்னையை தொடர்ந்து இந்தியாவில் சீன தயாரிப்புகளுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து சீனாவை சேர்ந்த டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது.

இந் நிலையில் தடை செய்யப்பட்ட சீன செயலிகளை நிர்வகித்த நிறுவன உரிமையாளர்களுக்கு அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளதா? அவற்றை பயன்படுத்திய பயனாளர்களின் தரவுகள் சீனாவுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதா என்பன உள்ளிட்ட 80 கேள்விகளை மத்திய அரசு எழுப்பி உள்ளது.

சீன ராணுவம் உள்ளிட்ட அந்த நாட்டு அமைப்புகளுக்கு இந்திய பயனாளர்களின் தரவுகள் வழங்கப்பட்டிருக்குமா என்பதன் அடிப்படையில், மத்திய அரசு இந்த கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

தடை செய்யப்பட்ட செயலிகளை நிர்வகித்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் யார்? என்ன சேவைகள் வழங்கப்பட்டன? தனிநபர் பாதுகாப்பு என்ன? தரவுகள் அடிப்படையிலான தகவல்கள் எவை உள்ளிட்ட பிரிவுகளில் இந்த கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.