வாரணாசி

வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் 2 ஆம் நாளாக தொல்லியல் துரை ஆய்வு நடத்தி வருகிறது.

வாரணசியில் உள்ள ஞானவாபி மசூதியில் அறிவியல்பூர்வமாக ஆய்வு மேற்கொள்ள நேற்று நீதிமன்றம் அனுமதி அளித்தது. நேற்று ஐந்து மணி நேரம் ஆய்வு நடைபெற்றது. இன்று 2-வது நாளாக ஆய்வு செய்ய தொல்லியல் துறை அதிகாரிகள் ஞானவாபி மசூதிக்குக் காலை 8 மணி மணிக்கு வந்து 9 மணிக்கு ஆய்வை தொடங்கினர்.

ஞானவாபி மசூதியில் இன்று தொல்லியல் துறையைச் சேர்ந்த 40 பேர் கொண்ட அதிகாரிகள் 2 ஆவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் மாலை வரை தொடர்ந்து ஆய்வு நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மசூதியில் ஆய்வு நடத்த உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்த மனுதாரர்களின் வழக்கறிஞர்,

”ஞானவாபி மசூதிக்கு தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு நடத்துவதற்காக ஞானவாபி மசூதிக்கு வந்து 9 மணிக்கு ஆய்வு தொடங்கியது. இன்று 2-வது நாள் ஆய்வு. இந்த ஆய்வு முடியும்  வரை மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

நாங்களும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறோம். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அதிகாரிகள் ஆய்வுக்கு வந்துள்ளனர். நாங்கள் அவர்களை நாங்கள் வரவேற்கிறோம். இந்த விவகாரத்தை விரைவில் தீர்க்க விரும்புகிறோம். எல்லா சந்தேகங்களையும் இந்த ஆய்வு தெளிவுபடுத்தும்”

என்று கூறி உள்ளார்.