யோத்தி

ன்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அயோத்தி ராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.

கடந்த மாதம் 22 ஆம் தேதி உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோவில் கட்டப்பட்டுச் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற்றது. அங்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமரை வழிபட்டு வருகின்றனர்.  ஏற்கனவே அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு தனக்கு முறையான அழைப்பு வரவில்லை என்று டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்கனவே தெரிவித்து  இருந்தார்

மேலும் அவர் தனது குடும்பத்துடன் கோவிலுக்குச் செல்ல விரும்புவதாகவும், சில நாட்கள் கழித்துச் செல்ல இருப்பதாகவும் கூறியிருந்தார்.  இதையொட்டி இன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் இன்று வந்தார். கோவில் அதிகாரிகள் அவரை வரவேற்றுப் பாதுகாப்புடன் சாமி தரிசனம் செய்ய அழைத்துச் சென்றனர். கெஜ்ரிவாலுடன் பஞ்சாப் முதல்வர  பகவந்த் மானும் அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்தார். அனைவரும் சாமி தரிசனம் செய்தனர்.

பிரார்த்தனை செய்த பிறகு, அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்,

“நான் குழந்தை ராமரை பிரார்த்தனை செய்த பிறகு விவரிக்க முடியாத அமைதியை உணர்ந்தேன். இங்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து பிரார்த்தனை மேற்கொள்கின்றனர்.  நான் அனைவரின் நலனுக்காகவும் நான் பிரார்த்தனை செய்தேன்.”

என்று கூறினார்.