சென்னை:  கொரோனா பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை முதல் இன்று காலை வரையிலான இடைப்பட்ட 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது. அதிகபட்சமாக சென்னையில்   பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த  எண்ணிக்கை  1,04,027 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை   2,202 ஆக உயர்ந்துள்ளது. நேற்று (4ந்தேதி)  மாலை நிலவரப்படி,  11,856  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில் கடந்த 16 மணி நேரத்தில் மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேரும், சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் 61 வயதுடைய முதியவர் ஒருவரும், அதேபோல போரூர் தனியார் மருத்துவமனையில் 60 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.