சென்னை

மிழக ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு நடந்ததற்கு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்..

இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்துக்குத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்து உள்ளார்.  அவர் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அண்ணாமலை

”இன்று ராஜ்பவன் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம், தமிழகத்தின் உண்மையான சட்டம்-ஒழுங்கைப் பிரதிபலிக்கிறது. திமுக முக்கியமில்லாத விஷயங்களில் மக்களின் கவனத்தைத் திசை திருப்புவதில் மும்முரமாக இருக்கும்போது, குற்றவாளிகள் தெருக்களில் இறங்கிவிட்டனர். 

சென்னையில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலக்தைக் கடந்த 2022-ம் ஆண்டு தாக்கிய அதே நபர்தான் இன்று ராஜ்பவன் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளார். 

திமுக அரசுதான் இந்தத் தாக்குதல்களுக்கு நிதியுதவி செய்கிறது என்று நினைக்கத் தோன்றுகிறது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எப்பொழுதும் செய்வது போல் அடுத்து திசை திருப்புவதற்குத் தயாராகி வருகிறார்.” 

என்று கண்டம் தெரிவித்துள்ளார்.