சிலிகுரி உயிரியல் பூங்காவில் உள்ள சிங்கத்திற்கு சீதா என பெயரிடப்பட்டது இந்துக்களின் மனதை புண்படுத்துவதாக உள்ளது என்று கூறி கொல்கத்தா நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரித்த நீதிமன்றம் சிங்கங்களின் பெயரை மாற்ற உத்தரவிட்டுள்ளது.

இந்து, கிருத்தவர், இஸ்லாமியர், மதப்போராளிகள் மற்றும் மரியாதைக்குரியவர்களின் பெயர்களை விலங்குகளுக்கு வைக்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

சிங்கங்களுக்கு சீதா மற்றும் அக்பர் என்று பெயரிடப்பட்டது ஏற்படுத்தியுள்ள சர்ச்சையைப் போக்க அந்த சிங்கங்களின் பெயரை மாற்றுங்கள் என்று உத்தரவிட்டுள்ளது.

சிங்கம் ‘சீதா’ இருக்க வேண்டிய இடம் கோயில்… காடு அல்ல… VHP தொடர்ந்த வழக்கை பொதுநல வழக்காக மாற்றி நீதிமன்றம் உத்தரவு