புதுடெல்லி:

பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்பட்டு, பொய் செய்திகளை ஒளிபரப்பும் ஜீ நியூஸ், ரிபப்ளிக் டிவி,இந்தியா டிவி ஆகியவற்றை புறக்கணிப்பது என அங்கன்வாடி ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.


கடந்த ஞாயிற்றுக் கிழமை டெல்லியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

மஜ்தூர் பிகுல் சங்கத்தின் ஷிவானி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் அவர் பேசும்போது, “போர் பதற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், போலி வீடியோவை வெளியிட்டு இந்த தொலைக் காட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
அவர்கள் நடத்தும் விவாதமும், உரக்க கத்துவதும் நாடு முழுவதும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா, மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆதரவாக இந்த தொலைக்காட்சிகள் செயல்படுகின்றன. இந்த தொலைக்காட்சிகளை புறக்கணிக்க வேண்டும்” என்றார்.

இதனையடுத்து, பொய் செய்திகளை வெளியிடும் பாஜக ஆதரவு தொலைக்காட்சிகளை பார்க்க மாட்டோம் என, ஷிவானி தலைமையிலான அங்கன்வாடி ஊழியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.