ங்கோல்

ந்திராவில் ஓங்கோல் பகுதியைச் சேர்ந்த பத்மாவதி விபத்தில் இறந்த தனது கணவருக்குக் கோவில் கட்டி உள்ளார்.

ஆந்திராவில் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஓங்கோல் பகுதியில் அங்கி ரெட்டி தனது மனைவி பத்மாவதியுடன் வசித்து வந்தார்.  இவர்கள் இருவருக்கும் சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.  4 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் சிக்கிய அங்கி ரெட்டி மரணம் அடைந்தார்.  அவர் மனைவி கணவர் பிரிவைத் தாங்காமல் தவித்து வந்தார்.

ஒரு நாள் பத்மாவதியின் கனவில் வந்த அங்கி ரெட்டி தமக்கு ஒரு கோவில் கட்ட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.  அவர் ஆசையை நிறைவேற்றப் பத்மாவதி தனது கணவருக்குக் கோவில் கட்ட விரும்பினார்.  அவரது மகன் சிவசங்கர் மற்றும் அங்கி ரெட்டியின் நண்பர் உதவியுடன் கோவிலைக் கட்டி உள்ளார்.

தனது கணவரின் மனம் பளிங்கு போன்றது எனத் தெரிவித்த பத்மாவதி கணவரின் சிலை பளிங்குக் கற்களால் செய்து வைத்துள்ளார்.  கணவரின் நினைவு நாள் மற்றும் பிறந்த நாட்களில் பத்மாவதி இக்கோவிலில்  சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கி வருகிறார்.  மரணம் அடைந்த கணவருக்காக மனைவி கோவில் கட்டிய நிகழ்வு அப்பகுதி மக்களுக்கு மனநெகிழ்வை ஏற்படுத்தி உள்ளது.