ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் தாம்பூர் கிராமத்தை சேர்ந்தவர், சின்ன சுப்பையா, திருமணமானவர்.

மனைவி சண்டை போட்டு விட்டு பிரிந்து சென்றதால், இரண்டாம் கல்யாணம் செய்ய விரும்பினார்.

ஆனால் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஏழை குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுமியை மணக்க ஆசைப்பட்டது தான் – கொடுமை.

மாதிரி படம்

அந்த சிறுமியின் அக்கா உடல் நலக்குறைவால் பாதிக்கப்ப்ட்டுள்ளார்.
அவரது சிகிச்சைக்கு பணம் தேவைப்பட்டது.

“உனது 12 வயது மகளை எனக்கு திருமணம் செய்து வைத்தால் 10 ஆயிரம் ரூபாய் தருகிறேன்” என்ன அந்த சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்தார், சுப்பையா.

வேறுவழி இல்லாமல் பணத்தை வாங்கிக்கொண்டு, 46 வயது சுப்பையாவுக்கு 12 வயது மகளை திருமணம் செய்து கொடுத்தனர், அவரது பெற்றோர்.

இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் அந்த சிறுமியை மீட்டு, காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர். சுப்பையா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

– பா. பாரதி