டில்லி

னைத்து மாநில முதல்வர்களும் ஊரடங்கை நீட்டிக்கும்படி பிரதமரிடம் கேட்டுக் கொண்ட போது ஆந்திர முதல்வர் அதை எதிர்த்துள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு ஏப்ரல் 14 உடன் முடிவடைகிறது.

ஆயினும் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரவில்லை.

இதையொட்டி இன்று மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.

அப்போது முதல்வர்கள் கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பஞ்சாப், ஒரிசா, உள்ளிட்ட சில மாநிலங்கள் ஏற்கனவே ஊரடங்கை நீட்டித்துள்ளன.

இந்நிலையில் ஆந்திர முதல்வர் ஜகன மோகன் ரெட்டி ஊரடங்கு நீட்டிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் முழுமையாக ஊரடங்கை நீட்டிக்காமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மட்டும் ஊரடங்கை கடைப்பிடிக்கப் பரிந்துரை செய்துள்ளார்.

பிரதமர் மோடி விரைவில் ஊரடங்கு நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என மாநில முதல்வர்கள் தெரிவித்துள்ளனர்.