சென்னை

வானிலை ஆய்வு மையம் அந்தமான் அருகே நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தாழ்வு மண்டலமாக மாறி உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

வங்கக் கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி வருகின்றன.   வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் இவ்வாறு உருவாகி வரும் நிலையில் தற்போது நான்காவது காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது.    தமிழகத்தில் ஏற்கனவே உருவான 3 காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கன மழை கொட்டி தீர்த்துள்ளது.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும் இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.    இது தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி இந்த புயல் வடக்கு ஆந்திரா தொடங்கி தெற்கு ஒடிசா இடையே கரையைக் கடக்கலாம் என தகவல் அளித்துள்ளது.   இதையொட்டி ஆந்திர மற்றும் ஒடிசா மாநில கடற்கரை மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க வேண்டும் எனவும் வானிலை ஆய்வு மையம் வலியுறுத்தி உள்ளது.