ம்போடிய நாட்டு மொழியான கேமரில் திருக்குறளை மொழிப்பெயர்த்து பாடமாக பள்ளி பாட நூலில் சேர்க்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்திருந்த நிலையில், தற்போது, கம்போடிய பள்ளி பாடப்புத்தகங்களில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவில் தமிழர்கள் ஆட்சி புரிந்துள்ளதாக பல ஆய்வறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.  அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்வ தற்காக கம்போடியாவின் கலாசாரம் மற்றும் பண்பாட்டு துறை இயக்குநர் மார்ன் சொப்ஹீப் சமீபத்தில்  தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது,  , 6ம் நூற்றாண்டு காலத்தில் காஞ்சி புரத்தை ஆட்சி செய்த பல்லவ அரசை ஆண்ட மகேந்திர வர்மன் தான் தற்போதைய கம்போடியா வின் கேமர் பேரரசை ஆட்சி புரிந்துள்ளார் என்பதை மாமல்லபுரத்தில் உள்ள கற்கால சிற்பங்களின் வாயிலாக அறிந்து கொண்டதாகவும்,  மேலும், காஞ்சிபுரம், மாமல்லபுரம், தஞ்சாவூர், சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பழங்கால பெருமைவாய்ந்த வழிபாட்டு தலங்களை ஆய்வு செய்தபோது தான் கேமர் பேரரசுக்கும், பல்லவ பேரரசுக்கும் தொடர்புள்ளதை அறிந்தோம்  என்றும் தெரிவித்திருந்தார்.

மேலும், கம்போடியாவின் கேமர் பேரரசுக்கு ஆதரவாக இருந்த ராஜேந்திர சோழனை பெருமைப் படுத்தும் வகையில் அவருக்கு தங்கள் நாட்டில் சிலை வைக்க இருப்பதாகவும், உலக பொதுமறை யான திருக்குறளை கேமர் மொழியில் மொழிப்பெயர்த்து கம்போடிய நாட்டு பள்ளி பாட நூல்களில் சேர்க்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், உலப்பொதுமறையான திருக்குறள் அங்குள்ள பள்ளிப்பாடப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது. இது தமிழுக்கும், தமிழர்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது.

கம்போடியாவில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.