டலூர்

என் எல் சி முற்றுகை போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் உள்ளிடோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.அங்கு  அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வன்முறை வெடித்து காவல்துறையினர் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பகுதி முழுவதும் பரபரப்புடன் காணப்பட்ட நிலையில், போக்குவரத்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது.  தற்போது என் எல் சி முற்றுகை போராட்டத்தைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர்.