நடிகர் சங்கத் தேர்தலைத் தொடர்ந்து இப்போதைய சூழலில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தேர்தல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது .

பாரதிராஜா தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, இயக்குநர்கள் பி.வாசு, அமீர், கே.எஸ்.ரவிக்குமார், எஸ்.பி.ஜனநாதன் ஆகியோர் தலைவர் பதவிக்கு மனுத் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில் இயக்குனர் அமீரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தலைவர் பதவிக்கு அமீர் அணியின் சார்பில் போட்டியிட விண்ணப்பித்திருந்த இயக்குனர் எஸ்.பி. ஜனநாதன் தாக்கல் செய்த விண்ணப்பமும் நிராகரிக்கப்பட்டுள்ளதால் இயக்குனர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தற்போது ஜனநாதன், அமீர் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதால் பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் ஆகிய இருவர் மட்டுமே போட்டியில் உள்ளனர். வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் வரும் 13ஆம் தேதி வெளியாகும் என்பது குறிப்பிடபட்டுள்ளது

இதையடுத்து தேர்தல் நடத்தும் அதிகாரி ஒருதலைபட்சமாக நடந்துகொள்கிறார் என்றும் அவர் தலைமையில் நடக்கும் தேர்தல் முறையாக நடக்க வாய்ப்பில்லை எனவும் கூறி அமீர் அணியினர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். இதனால் இயக்குனர் சங்கத் தேர்தலில் பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது