ஐதராபாத்:

அமெரிக்காவின் சிகாகோ நகரில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய மாணவர் படுகாயமடைந்தார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் உபால் பகுதியை சேர்ந்தவர் முகமது அக்பர் (வயது 30). இவர் அமெரிக்காவின் இலினாய்ஸ் நகரில் உள்ள டெவ்ரி பல்கலையில் படித்து வருகிறார். மர்ம நபர் ஒருவர் நேற்று துப்பாக்கியால் சுட்டதில் அக்பர் காயம¬ந்தார். இதனால் அவர் தீவிர சிகிச்சை பெற்ற வருகிறார்.

இது தொடர்பாக அவரது தந்தை கூறுகையில், ‘‘ சிகாகோவில் உள்ள பூங்கா அருகே காரை எடுக்க சென்ற அக்பரை மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டான். கன்னத்தில் குண்டு பட்டதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எங்களது மகனை பார்க்க அமெரிக்கா செல்வதற்கு அவசர விசா வழங்க வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா உதவி செய்ய வேண்டும்’’ என்றனர்.